Monday, 7 March 2022

அரச மரத்தின் தனி பெரும் சிறப்பு

"ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழைபெய்தேதீரும்" எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.... நமது மண்ணின் மரங்களைப்பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரசமரத்திலிருந்தே துவங்கவேண்டும் அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும் எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்... மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது. இவற்றின் பலனும் மிகப்பெரியது. அதனால்தான் நமது முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கையில் இம்மரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளனர்... எந்தச் சூழ்நிலையிலும் யாரும் இதை வெட்டிவிடவேகூடாது என்பதற்காகவே இதை வணக்கத்திற்குரிய கடவுள் நிலையில் வைத்திருந்தது தமிழ்ச்சமூகம். வேறு எந்தக்காரணத்தைச் சொன்னாலும் வெட்டிவிடுவார்களோ என்கிற அக்கறைகூட அதன்கீழே சாமிசிலைகளை நட வைத்திருக்கலாம். அவ்வளவு முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றதே இந்த அரசமரம்... புத்தரிற்கு போதிமரத்தின் கீழ் ஞானம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது அந்த போதிமரம் வேறெதுவுமில்லை அரசமரம்தான்.ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுதான் மூளைக்காண உணவு. வளர்சிதை மாற்றத்தில் சிதைகிற உடலை சரிகட்டுவதில் பிராணவாயுவின் பங்கே மிகமிக அதிகம். பிராணன் என்கிற உயிர்வளியை நன்குவளர்ந்த ஒருமரம் நாளொன்றிற்கு சுமார் இரண்டாயிரத்து நானூறு கிலோவரை வெளியிடுகிறதாம்.ஒரு மனிதனுக்கு தேவையான உயிர்வளியின் அளவு நாளொன்றிற்கு எண்ணூறு கிராம். அப்படியானால் ஒரு மரம் எத்தனைபேருக்கு உதவுகிறது என கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை அரசமரம் என்பதில் தவறே இல்லை. மற்றொரு சிறப்பாக அரசமரமானது இரவுநேரத்திலும் பிராணவாயுவை வெளியிடுவதாக சொல்கிறார்கள். இவ்வளவு பெரியளவு உள்ள, உயிராற்றலின் கீழ் யார் தொடர்ந்து அமர்ந்திருந்தாலும் ஆரோக்கியமும், சிந்தனைத்தெளிவும்(ஞானம்)பெற்று புத்தனாகலாம் என்பதில் சந்தேகமில்லை !!!... சும்மா மரத்தினடியில் இரு உடலின் ஆரோக்கிய குறைபாடு நீங்கும் எனச் சொன்னால் யாரும்பின்பற்ற மாட்டார்கள் என்பதாலோ என்னவோ அதை கடவுளாக்கி அதன்வேரினடியில் நீரைஊற்றி சுற்றிவா... என அதன்கீழே ஒரு சிலையையும் வைத்திருக்கின்றனர். நாமோ இன்று காரணத்தை மறந்து காரியத்தைமட்டும் செய்து கொண்டிருக்கும் போலி நாகரீகச்சமூகத்தில் இருக்கிறோம். மரத்தின் வேரைச்சுற்றிலும் கான்கிரீட் தளத்தைப்போட்டு அதன் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் கொண்டாடப்படவேண்டிய பொருள் காணாமல் போய்விட்டது. அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரைமட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது.... இந்த கோடையின் துவக்கத்திலேயே மிகுவெப்பத்தால் படுகிற வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அருகில் ஏதாவது அரசமரம் இருந்தால் அதனடியில் சிறிதுநேரம் அமர்ந்துபாருங்கள்.... அந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் அனுபவித்துவிட்டு செல்லுங்கள். இயற்கையும் கோடைக்குத்தகுந்தபடி புதிய தளிர் இலைகளுடன் தயார்படுத்தியிருக்கும் அழகையும் கவனியுங்கள்.... அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம்... இதுவெல்லாம் அரச மரத்தின் பெயர்கள்.... எல்லாப் பறவைகளும் இரவு அடைவதற்கு எல்லாமரங்களையும் தேர்ந்தெடுக்காது, ஆனால் பெரும்பாலான பல பறவைகள் இரவு இருப்பிடமாக பெரும்பாலும் அரசமரத்தை விரும்புகின்றன. பல்லுயிர்ச்சூழல் பெருக்கத்தில் உதவுவதில் பெரும்பங்கைக் கொடுப்பது, அரச மரங்களே.இதன் பழங்களை பறவைகள் விரும்பி உண்ணும் என்பது இன்னும் சிறப்பு.... இனியாவது இதன் மகத்துவத்தை உணர்ந்து வேறு அன்னிய மரங்களைத் தவிர்த்து, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நமது மண்ணின் மரமான அரசமரத்தினை நட்டு இந்த பூமியை குளிர்வித்து, மழையை ஈர்த்து சுகமாக நல்ல காற்றினை வரும் தலைமுறையை சுவாசிக்கச் செய்வோம். நீரைப்போல் காற்றையாவது காசுகொடுத்து வாங்காமல் இருப்போம்...

No comments:

Post a Comment

Join this site to get the latest updates & insight. Make friends and more...

HeyoCritiq, who....

Well, I am basically a critic..neither a supporter nor a sympathizer of any political party.....or the high and the mighty. A former freelance journalist and (amateur) photographer who once made a living thus! A cheerful and jolly guy, completely self made, moderately educated, well read and travelled, gathering great experiences; learning from the thick and thin and deriving the wisdom of life. One who learns from everyone and firmly believes its a continuous process. Fairly honest who takes pride in calling a spade a spade and has a direct approach. Gets inspired by the honoured and the humble. Unsparing. A critic. Does not hesitate to self criticize; in fact, welcomes criticism and laughs over it / corrects if & when possible. An ardent believer and lover of God;strongly believe in Him as the Creator and the Destroyer.A devout man.........believes that God is the Ultimate & the Almighty. Nothing happens without him. A lot more.......

Disclaimer


Views expressed here are solely that of the writers.
Best efforts have been taken to ensure there is no infringement of any copyright or any other infringement related to IPR or any other rights or properties whatsoever. Should there be any, please bring it to our attention enabling removal / rectification asap and acknowledgement of the same if possible.

There is no intention whatsoever to hurt anyone's feeling in any way. Readers are free to comment / air their views and feelings. Efforts shall be taken to correct / amend if required and if possible.

Advertisements are NOT selected or decided by me. Products or services advertised here are NOT vouched or endorsed by Heyo Critiq.

IF HAPPY TELL OTHERS. IF NOT, TELL ME. HeyoCritiq